Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் மேலும் பரபரப்பு; எண்ணூர் சிறுமி கொலை; பக்கத்துவீட்டு பெண் கைது

சென்னையில் மேலும் பரபரப்பு; எண்ணூர் சிறுமி கொலை; பக்கத்துவீட்டு பெண் கைது
, திங்கள், 20 பிப்ரவரி 2017 (15:32 IST)
எண்ணூர் சிறுமி கொலை வழக்கில் பக்கத்து வீட்டு பெண் தனது கள்ளக்காதலுடன் கைது செய்யப்பட்டார். அந்த பெண் நகைக்காக சிறுமியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.


 

 
எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பழனி என்பவரது மகள் ரித்திகா(3) நேற்று முந்தினம் திடீரென மாயமானார். நேற்று காலை திருவொற்றியூர் அருகில் உள்ள கும்பை கிடங்கில் அவரது உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
 
இதையடுத்து சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. எண்ணூர் காவல்துறையினர் வழக்குப்பதவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ரித்திகா தங்க செயின், வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி கொடி அணிந்துயிருந்தது தெரியவந்தது.
 
ஆனால் உடல் மீட்கப்பட்ட போது நகைகள் இல்லை. எனவே சிறுமி நகைக்காக கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி காணாமல் போன அன்று எதிர் வீட்டில் விளையாடியது தெரியவந்தது. சந்தேகமடைந்த காவல்துறையினர் சிறுமியின் எதிர் வீட்டில் இருந்த ரேவதியிடம் விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் ரேவதி தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து சிறுமியை நகைக்காக கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரேவதி மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்தனர். 
 
பூந்தமல்லியில் சிறுமியை கொலையை தொடர்ந்து எண்ணூர் சிறுமி கொலை சம்பவம் சென்னையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெற்ற மகளை பலாத்காரம் செய்த போதை ஆசாமி!