Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளின் கல்யாண செலவுக் கடனை இப்படியா அடைப்பது – வேலைக்கார பெண்ணின் துணிகர செயல் !

மகளின் கல்யாண செலவுக் கடனை இப்படியா அடைப்பது – வேலைக்கார பெண்ணின் துணிகர செயல் !
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (08:53 IST)
லஷ்மி

சென்னை அண்ணாநகரில் வீட்டு வேலை செய்யும் லெட்சுமி என்ற பெண் தான் வேலைபார்த்த வீட்டில் இருந்து 5 லட்சத்தைத் திருடியுள்ளாட்ர்.

ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமி கணவரை விட்டுப் பிரிந்து வாழும் சென்னையைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இதில் ஒரு மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது சென்னையில் அண்ணாநகரில் உள்ள புஜ்ஜியம்மாள்  என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் புஜ்ஜியம்மாள் தன்னுடைய பீரோவில் வைத்திருந்த 5 லட்ச ரூபாயை நேற்று தேடிய போது அது காணாமல் போயுள்ளது. இதையடுத்து லட்சுமி மேல் சந்தேகம் இருப்பதாக போலிஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலிஸார் லட்சுமியையும் அவரது காதலர் கோவிந்தனையும் விசாரணை செய்த போது இருவரும் திருடியதை ஒத்துக் கொண்டனர்.

அவர்களைக் கைது செய்த போலிஸார் திருடிய பணத்தைக் கேட்டபொது, அதை வைத்து மகளின் திருமண செலவுக்காக வாங்கிய கடனை அடைத்துவிட்டதாக சொல்லியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 5000 ரூபாயை போலிஸார் கைப்பற்றினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை பாராட்டிய கமலுக்கு ரசிகர்கள் கண்டனம்