Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதவாத ஏ.டி.எம்-ற்கு அஞ்சலி செய்து ஒப்பாரி வைத்த பெண்கள் - பரபரப்பு வீடியோ

உதவாத ஏ.டி.எம்-ற்கு அஞ்சலி செய்து ஒப்பாரி வைத்த பெண்கள் - பரபரப்பு வீடியோ
, வெள்ளி, 18 நவம்பர் 2016 (16:31 IST)
புதிய நோட்டுகள் எடுக்க முடியாமல், கடந்த பல நாட்களாக செயலற்று போய் இருந்த ஒரு ஏ.டி.எம் மையத்திற்கு, பெண்கள் ஒன்று கூடி அஞ்சலி செய்து ஒப்பாரி வைத்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
மக்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை, புதிய நோட்டுகளாக எடுப்பதற்காக மக்கள் வங்கி ஏ.டி.எம் மையங்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.
 
ஆனால், அனைத்து ஏ.டி.எம் எந்திரங்களிலும் புதிய ரூபாய் நோட்டு வைக்கப்படாததால், பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் வேலை செய்ய வில்லை. இதனால் மக்கள் அங்கு பணம் எடுக்க செல்லும் பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்புவது வாடிக்கையாகி விட்டது.
 
இந்நிலையில், அரசு மீது தங்களுக்கும் இருக்கும் கோபத்தை, சில பெண்கள் வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது, பணம் இல்லாத ஒரு ஏ.டி.எம் மையத்திற்கு மாலை அணிவித்து, இறந்து விட்டதாக பாவித்து, அழுது, அஞ்சலி செலுத்தி, ஒப்பாரி பாடல் பாடினர்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏடிஎம்-ல் பணம் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?