Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கத்தி முனையில் பெண் பலாத்காரம்!

சென்னையில் கத்தி முனையில் பெண் பலாத்காரம்!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (13:33 IST)
சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் சிலர் பலாத்காரம் செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறித்து மர்ம நபர்கள் நுழைந்து கொள்ளையடுத்துவிட்டு அவர்களை பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக நடப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்துவரும் மணிப்பூரை சேர்ந்த ஐரின் என்ற நபரும் மர்ம நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று வீட்டில் தனியாக இருந்த ஐரினின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஐரினை கத்தியைக் காட்டி மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து மணிப்பூரை சேர்ந்த ஐரின் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை வழக்காக பதிவு செய்த போலீசார் ஐரினை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் ஐரினை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்