Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெட்போன் மாட்டிய படி தூங்கிய பெண் மரணம் - சென்னையில் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 7 மே 2018 (13:13 IST)
இரவில் காதில் ஹெட்போன் மாட்டிய படி தூங்கிய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை கணத்தூர் பகுதியில் வசிப்பர் பாத்திமா(45). இவர் கடந்த சனிக்கிழமை இரவு தூங்கும் போது காதில் ஹெட்போன் மாட்டி பாட்டு கேட்ட படியே தூங்கிவிட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் கணவர் அவரை எழுப்பிய போது அவர் எழவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரின் கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
 
பாத்திமாவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சந்தேகம் மரணம் என்பதால் இதுகுறித்து போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. எனவே, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் பாத்திமா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
 
இரவின் செல்போனில் பாடல்கள் கேட்டுக்கொண்டே ஹெட்போனை கழட்டாமல் தூங்கியதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments