Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் தந்தையை கொல்ல முயன்ற பெண் மருத்துவர்- வீடியோவால் பரபரப்பு

சென்னையில் தந்தையை கொல்ல முயன்ற பெண் மருத்துவர்- வீடியோவால் பரபரப்பு
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (12:16 IST)
சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால்(83). இவர் உடல் நலக்குறைவு காரணமாக தனது மகனின் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிகிச்சைக்காக சேர்ந்தார்.


 

இவரது மகள் ஜெயசுதா. மருத்துவரான இவருக்கு தந்தையுடன் சொந்து பிரச்னையில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் தந்தை சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு சென்ற ஜெயசுதா படுக்கையில் படுத்திருந்த தந்தையின் கைரேகைகளை வெற்று பேப்பர் ஒன்றில் பதிவு செய்துவிட்டு,பின் தந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகளை பிடுங்கி விட்டதாக புகார் கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை  நிருபிக்கும்விதமாக மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டு அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸார் டாக்டர் ஜெயசுதா மற்றும் அவரது மகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணை பலாத்காரம் செய்த போக்கிமான் கேரக்டர்