Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசயத் தூண்டனும் – பலபேரை முட்டாளாக்கிய பெண் !

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (08:27 IST)
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை போலியான தங்க நாணயங்களைக் கொடுத்து பெண் ஒருவர் பலரை ஏமாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நகரின் பரபரப்பான பகுதிகளில் ஒன்று. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமான இதில் ஒரு பெண் பல பேரை நூதனமாக ஏமாற்றியுள்ளார். மருத்துவமனை நுழைவாயிலில் நிற்கும் அவர் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அங்கு வருபவர்களிடம் ‘எனது தந்தைக்கு உடம்பு சரியில்லை. இந்த தங்க நாணயத்தை வைத்துக்கொண்டு 500 ரூபாய் மட்டும் கொடுங்கள்’ என பரிதாபமாக கேட்பது வழக்கம். பலபேரும் ஆஹா தங்கநாணயம் 500 ரூபாய்க்கா என்று பணத்தைக் கொடுத்துள்ளனர்.

பின்னர்தான் அவை அனைத்தும் கவரிங் நகைகள் என தெரிந்து ஏமாந்தது தெரியவந்துள்ளது. இதுபோல பல மோசடிகள் அங்கு நடந்ததை அடுத்து காவலர்கள் பிரியா என்ற அந்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில் சில நாட்களுக்கு முன்பு கூட பிரியா வயதான முதியவர் ஒருவரிடம் 3 பவுன் தங்க நகைகளைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணம் வந்ததும் அக்கவுண்ட் க்ளோஸ்! 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள்! - அதிர்ச்சியளிக்கும் சிபிஐ ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கூட்டணி அரசு தான்.. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி தான்.. அமித்ஷா

தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு.. தொண்டர்கள் உற்சாகம்..!

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments