Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண்.. நடுவானில் பிரிந்து உயிர்..!

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (10:50 IST)
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பெண் ஒருவர், நடுவானில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை, மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் என்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பெண் பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தூக்கத்திலேயே அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிகிறது.

உயிரிழந்த பெண்ணின் பெயர் கலையரசி என்றும், விமானம் சென்னையில் இறங்கியதும், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.

விமானத்தில் உயிரிழந்த கலையரசியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments