மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண்.. நடுவானில் பிரிந்து உயிர்..!

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (10:50 IST)
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பெண் ஒருவர், நடுவானில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை, மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் என்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பெண் பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தூக்கத்திலேயே அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிகிறது.

உயிரிழந்த பெண்ணின் பெயர் கலையரசி என்றும், விமானம் சென்னையில் இறங்கியதும், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.

விமானத்தில் உயிரிழந்த கலையரசியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments