Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்த பெண் – அருகில் மருத்துவமனை இருந்தும் காப்பாற்ற முடியாத அவலம் !

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (08:37 IST)
சென்னை கே கே நகரில் வீட்டிலுள்ள பழைய ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

சென்னை கே கே நகரை அடுத்துள்ள கன்னிகாபுரம் 3 ஆவது தெருவில் பழனி மற்றும் சுமித்ரா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். சுமித்ரா நேற்று முன் தினம் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெகு நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த ஷூ ஒன்றை எடுத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது  அதனுள் இருந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்துள்ளது.

இதையடுத்து கே கே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அவர். ஆனால் அங்கு விஷமுறிவு மருந்துகள் இல்லாததால் ஸ்டான்லி மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்துள்ளனர். அங்கு அழைத்துச் செல்வதற்குள் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது.

இதனால் நரம்பு மண்டலம் செயலிழந்ததால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒருவேளை கே கே நகர் அரசு மருத்துவமனையில் பாம்புக்கடிக்கான விஷமருந்து இருந்து அங்கே சேர்த்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments