Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை மேயர் மீது புகாரளித்த பெண்ணின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:01 IST)
கோவை மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்த பெண்ணின் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கோவை மணியக்காரன் பாளையம் என்ற பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் சமீபத்தில் மேயர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
 இந்த நிலையில் புகார் அளித்த பெண்ணின் கார் அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் காரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. 
 
இது குறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்ததாகவும் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 மேயர் குடும்பத்தினர் மீது புகார் அளித்த மறுநாளே அந்த பெண்ணின் கார் தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments