Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் குளித்த பெண்களை , ரகசிய கேமராவில் புகைப்படம் எடுத்த நபர்...

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (18:27 IST)
கன்னியகுமரி மாவட்டம் தோவாளை என்ற பகுதியில் ஆற்றில் குளித்த பெண்களைப் புகைப்படம் எடுக்கவேண்டி பைக்கில் ரகசிய கேமராவை பொருத்திய வாலிபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமர் மாவட்டம் தோவாளை என்ற பகுதியில் பெண்கள் குளிக்கும் படித்த படித்துறைகு அருகே, சில நாட்களாக தினமும் பைக் பைக் நிறுத்துவதை ஒரு இளைஞர் வழக்கமாக வைத்திருந்தார். அந்த பைக்கை பார்த்த அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் சில ஏறுக்குமாறான பதிலைச் சொல்லிவிட்டு கிளம்பிச்செல்லுவதில் ஆயத்தமாக இருந்த இளைஞனின் பைக்கில் ஒரு கறுப்பு நிற பெட்டி இருந்துள்ளதை பார்த்தனர். அதை திறந்துபார்த்தபோது அதில் வீடியோ ரெக்கார்டிங் செய்தபடி ஒரு ஸ்மார்ட் போன் இருந்தது. 
 
இதனைப் பார்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீஸார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பேர் வெங்கடேசன் (24)என்பதும், பெண்கள் குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் போலீஸார் அவரிடம் விசாரித்துவருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments