Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப சிதம்பரத்தின் சிபிஐ காவல் நீட்டிப்பு..நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (17:22 IST)
ப சிதம்பரத்தின் சிபிஐ காவலை சிறப்பு நீதிமன்றம் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் படி, ப சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, சிபிஐ தரப்பில் ப சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் எடுக்க அனுமதி வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் பின்பு ப சிதம்பரத்தின் சிபிஐ காவலை 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நிதிபதி.

இந்நிலையில் சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிவடைந்ததால் இன்று மதியம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பினர், இன்னும் விசாரணை நடத்த உள்ளதால் காவலை இன்னும் 5 நாள் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ப சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments