Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மடங்கு சுங்க கட்டணம்?? டோல்கேட் ஊழியரை தாக்கிய பெண்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:58 IST)
செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் அதிக சுங்க கட்டணம் கேட்ட ஊழியரை பெண் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் சுங்க கட்டணமும் உயர்ந்துள்ளது விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடியில் காரில் வந்த பெண் பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் போதிய பேலன்ஸ் இல்லாத நிலையில் பணமாக 110 ரூபாய் கட்ட வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர் கூறியுள்ளார்.

இதனால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பதா என அந்த பெண்ணுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரத்தில் அந்த பெண்ணும், அவருடன் வந்த ஆணும் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதுடன், சுங்கசாவடி கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இதனால் சுங்கச்சாவடியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments