Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் கஞ்சா விற்ற பெண்: வளைத்து பிடித்த போலீஸார்

வீட்டில் கஞ்சா விற்ற பெண்: வளைத்து பிடித்த போலீஸார்
, வியாழன், 24 ஜூன் 2021 (11:06 IST)
வால்பாறை அடுத்த காமராஜர் நகரில் கஞ்சா விற்ற பெண்ணை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 
கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரில் வசித்து வரும் முத்துலட்சுமி வயது 43 க/ பெ தாஸ் இவர் அப்பகுதியில் தன்னுடைய மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார். தற்போது மழையின் காரணமாக அவருடைய வீடு இடிந்த உள்ளதாக தெரிவித்து காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் 3 சென்ட் நிலத்தில் செட்  அடித்துள்ளார். 
 
இதனால் அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் வருவாய்த்துறை வட்டாட்சியர் ராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டபோது வீட்டில் கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக  காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு அதன்பேரில் வால்பாறை காவல்துறை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் முஜிப் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு 1.300 கிராம் கஞ்சா ரொக்கப்பணம் 79 ஆயிரம் சிக்கியது. 
 
உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து கைது செய்து கோவை மகளிர் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இவருடைய கணவர் கஞ்சா விற்பனையில் பல முறை சிறை சென்றது தெரியவந்துள்ளது. தற்போது அவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் அப்பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி வந்து கஞ்சா பெற்று செல்வதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் கஞ்சா விற்பனையில் பெண் ஈடுபட்டுவந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீத்தேன், சிஏஏ போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!