Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு சூனியம் - வேட்பாளர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி

திமுகவுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு சூனியம் -  வேட்பாளர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி
, புதன், 31 மார்ச் 2021 (16:25 IST)
திமுகவுக்கு ஓட்டுபோடாதவர்களுக்கு சூனியம்வைத்துள்ளதாக வேட்பாளர் ஒருவர் பிரசாரம் மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஆ.ராசா முதல்வரின் தயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு ஸ்டாலின் மற்றும் கனிமொழி  கணித்தனர்,

பிரசாரத்தின் பேசும்போது கண்ணியத்தைக் கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினர். இன்று பிரசாரம் மேற்கொண்ட கடலூரு தொகுதி திமுக வேட்பாளர் ஐயப்பன், கடலூர் தொகுதி மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலம் சூனியம் வைத்துள்ளோம் எனவும் திமுகவுக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என சாபம்விடுவது போல் பேசியுள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலவசம் வழங்கும் கட்சிகளை ஏன் தடை செய்யக் கூடாது? – மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி!