Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈழ விடுதலையை இழிவு செய்து படம் எடுப்பதா? ஒற்றை பனைமரத்தை தடை செய்ய வேண்டும்! - சீமான் கண்டனம்!

ஈழ விடுதலையை இழிவு செய்து படம் எடுப்பதா? ஒற்றை பனைமரத்தை தடை செய்ய வேண்டும்! - சீமான் கண்டனம்!

Prasanth Karthick

, வியாழன், 24 அக்டோபர் 2024 (10:34 IST)

இலங்கை ஈழ விடுதலை போர் குறித்து தயாராகியுள்ள ‘ஒற்றை பனைமரம்’ படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கையில் நடந்த ஈழ போராட்டம் குறித்த படமாக தயாராகியுள்ளது ‘ஒற்றை பனைமரம்’. ஈழத்தில் விடுதலை புலிகள் அமைப்பிற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த போரை களமாக கொண்டு தயாராகியுள்ள இந்த படத்தில், விடுதலை புலிகள் அமைப்பினர் அங்குள்ள மக்களை துன்புறுத்தியதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

 

பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிட்டபோதே பல விமர்சனங்களை எதிர்கொண்ட இந்த படம் நாளை தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் “ஈழத்தாயக விடுதலை போராட்டத்தை இழிவுப்படுத்தும் ஒற்றை பனைமரம் திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிடப்பட அனுமதிக்கக் கூடாது. தாய் மண்ணின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரையும் இழந்த மாவீரர்களின் ஈகத்தை கொச்சைப்படுத்தும் பொய் பரப்புரைகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஆண்டுகளில் 1 கோடி மக்கள் தொகை குறைவு! முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடு?