Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசியர்களுக்கும் விடுமுறை... ஏற்றுக்கொள்ளுமா தமிழக அரசு?

Advertiesment
ஆசியர்களுக்கும் விடுமுறை... ஏற்றுக்கொள்ளுமா தமிழக அரசு?
, வியாழன், 20 ஜனவரி 2022 (19:24 IST)
சனிக்கிழமைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை. 

 
தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க அரசு சமீபத்தில் இரவு நேர ஊரடங்குடன் கொரொனா கட்டுப்பாடுகள் விதித்தது. அதேபோல பள்ளிகளுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 
10, 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அலுவல் சார்ந்த பணிகளை ஆசிரியர் செய்ய வேண்டுமென  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
 
இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் இல்லையெனில் ஆசிரியர்களுக்கும் வேலை இல்லை. நிர்வாக பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும் என விரும்பினால் அதற்காக ஒட்டு மொத்த  ஆசிரியர்களையும் தினமும் வரவழைப்பது அவசியம் இல்லை. 
 
எனவே, சுழற்சி முறையில் ஆசிரியர்களை பள்ளிக்கு  வரவழைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதமாற்ற தடை சட்டம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!