Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்தர் ஆசிரமத்திற்கு மோடி வந்தால் தற்கொலை செய்து கொள்வேன்: இளம்பெண் மிரட்டல்

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (10:15 IST)
இன்று ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மானியவிலை ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, நாளை புதுவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவற்றில் ஒன்று பிரதமர், புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்வது.

இந்த நிலையில் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹேமலதா என்ற இளம்பெண், பிரதமர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு வருகை தந்தால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

ஹேமலதாவுடன் அவரது நான்கு சகோதரிகளும் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகள் பாலியல் தொல்லை தருவதாக கூறி குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஹேமலதாவின் இரண்டு சகோதரிகளும், தாயாரும் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் மீண்டும் தற்கொலை மிரட்டலை ஹேமலதா விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்