Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த மண்ணில் விஜயகாந்திற்கு சிலை வைக்கப்படுமா?.. மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (10:04 IST)
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 
தமிழ் திரைத்துறை நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல்
நல குறைவால் காலமானார். மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயகாந்திற்கும் மதுரைக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. 
 
விஜயகாந்த்க்கு மதுரையில் வெங்கல சிலை வைக்க வேண்டுமென விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மதுரை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள், மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயகாந்தின் முழு உருவ சிலையை மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில்  அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments