Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிபோதையில் கணவனை துரத்தி துரத்தி சுட்ட மனைவி

குடிபோதையில் கணவனை துரத்தி துரத்தி சுட்ட மனைவி
, சனி, 6 மே 2017 (14:55 IST)
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், ஆத்திரமடைந்த மனைவி போதையில் கணவனை துரத்தி சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார்.


 

 
ஓசூரில் இருந்து பெங்களூருக்கு சாய்ராம்(53) தனது மனைவி அம்சாவுடன்(48) காரில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் இருவரும் மது குடித்துள்ளனர். பின்னர் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.
 
இந்த சண்டையில் சாய்ராம், அம்சாவை அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அம்சா காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து சாய்ராமை சுட்டார். சாய்ராம் வயிற்று பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதிர்ச்சியடைந்த சாய்ராம் காரில் இருந்து வெளியேறி பேருந்து ஒன்றை பிடித்து தப்பி சென்றுள்ளார்.
 
அம்சா அவரை விடாமல் காரை எடுத்துக்கொண்டு பேருந்தை பின்தொடர்ந்து சென்று மடக்கியுள்ளார். பேருந்தில் ஏறி சாய்ராமை கொலை செய்ய முயற்சித்துள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் அம்சாவிடம் இருந்து சாய்ராமை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர்.
 
இதையடுத்து அம்சாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பண மோசடி வழக்கு ; அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு