Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலால் விபரீதம் - கணவனை கத்தரிகோலால் குத்திக் கொன்ற மனைவி

Webdunia
திங்கள், 13 ஜூன் 2016 (10:23 IST)
கள்ளக்காதலால் விவகாரத்தில், கணவனை கத்தரிகோலாலும், இரும்புக் கம்பியாலும் தாக்கிக் கொன்ற மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரை சேர்ந்தவர் இன்பநாதன் (42). இன்பநாதன் ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி திவ்யா (எ) ஜெயராணி (36). திவ்யா வீட்டின் அருகிலேயே அழகு கலை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். 
 
இன்பநாதன் சில நாட்களாக தனது ஊதியத்தை வீட்டில் ஒழுங்காக கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், இன்பநாதனுக்கும், திவ்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கடந்த மாத ஊதியத்தையும் முழுமையாக வீட்டில் கொடுக்காமல் இருக்கவும் மனைவி திவ்யா இது குறித்து கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த திவ்யா கத்திரிகோலை எடுத்து அன்புநாதனின் மார்பில் குத்தியுள்ளார்.
 
அன்புநாதன் திருப்பி தனது மனைவியை அடிக்க முயல திவ்யா இரும்பு கம்பியால் அன்புநாதனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் இன்பநாதன் இறந்தார். இது குறித்து ஆர்.கே.நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திவ்யாவை கைது செய்தனர்.
 
மேலும், இக்கொலை சம்பந்தமாக விசாரணை நடத்தியதில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் திவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனைவி மீது சந்தேகப்பட்டு கள்ளக்காதல் விவகாரத்தை கணவன் தட்டி கேட்டதால் ஏற்பட்ட கொலையா? என்ற ரீதியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments