Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் எழுச்சிப் பெருகிறது தேமுதிக - ம.ந.கூட்டணி : திமுக, அதிமுக கலக்கம்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2016 (09:49 IST)
உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி தொடரும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் ஆயுள் தண்டனை காலத்தை தாண்டியும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.
 
சென்னை நகரம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதுமே கூலிப்படை கலாச்சாரம் பரவி வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
சட்டப்பேரவைத் தேர்தலில் பணபலத்தால் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் எங்கள் அணி துவண்டு விடவில்லை. எங்கள் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்” என்று கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிலிருந்து மற்ற கட்சிகள் தேமுதிக-மக்கள் நல கூட்டணி உடையும் என்று எதிர்பார்த்திருந்தன. ஆனாலும், இணைந்தே தேர்தலை சந்தித்தன. தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் தனித்தனியாக பிரிந்து செல்ல வாய்ய்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. தற்போது திருமாவளவன் இவ்வாறு கூறியிருப்பது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments