Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்காதல் தெரிந்ததால் காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

Advertiesment
கள்ளக்காதல் தெரிந்ததால் காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
, புதன், 25 ஜனவரி 2017 (13:29 IST)
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 

செங்கல்பட்டு அடுத்த புல்லம்பாக்கத்தை சேர்ந்தவர் முரளி (36). முரளி 10க்கு மேற்பட்ட சிறிய பொக்லைன் இயந்திரங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தார். இவரது மனைவி வனஜா (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதற்கிடையில், பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு கொடுக்கும் போது, ஸ்ரீபெரும்புதூர் அருகே மேட்டு பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் முரளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இதையொட்டி, முரளி வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரமேஷ் கலந்து கொண்டுள்ளார்.

இந்த சமயத்தில் முரளியின் மனைவி வனஜாவுடன் ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. பின்னர், முரளி இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த சுரேஷ் வனஜாவுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு வனஜா கடைக்கு சென்று வந்துள்ளார். அப்போது, வனஜா மறைத்து வைத்திருந்த ஆன்ட்ராய்டு செல்போனை முரளி பார்த்துள்ளார்.

இதை பார்த்த முரளி, ‘இந்த போன் யாருடையது, எப்போது வாங்கினாய்?’ என்று கேட்டுள்ளார். பிறகு அந்த போனை ரமேஷ் பார்த்தபோது அதில் ரமேஷின் செல்போன் எண், அவர்கள் பேசிய வாட்ஸ் ஆப் உரையாடல், வீடியோ, மெசேஜ், போட்டோ ஆகியவை இருந்தது.

இதனால் முரளி, மனைவி வனஜாவை கண்டித்தார். ஆனாலும், வனஜா முரளியுடனான பழக்கத்தை தொடர்ந்துள்ளார். மேலும், வனஜா, ரமேஷிடம் கூறியுள்ளார். இதனால், இருவரும் சேர்ந்து முரளியை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி ஒரகடம் பகுதியில் பைக்கில் வந்த, முரளியை, ரமேஷ் தனது நண்பர்களுடன் வழிமறித்து, அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று, இரும்பு ராடு மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து சடலத்தை சாலையில் வீசிவிட்டு, அவர் ஓட்டி வந்த பைக்கையும், விபத்தில் ஏற்பட்டதை போல் உடைத்தனர். இதுபற்றி வனஜாவுக்கு தகவல் கொடுத்து விட்டனர். வனஜாவும், தனக்கு எதுவும் தெரியாதது போல கதறி அழுது அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

இதுகுறித்து பாலூர் போலீசார் முரளி இறந்ததை விபத்து வழக்காக பதிவு செய்தனர். மேலும் அவரது உடல் தகனமும் செய்யப்பட்டுவிட்டது.

இதற்கிடையில், வனஜாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை சுரேஷ் சென்றுள்ளார். ஆனால், மாலை வரை வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அந்த வீட்டை பூட்டி வைத்து, அவர்களை சிறை வைத்தனர்.

தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, வனஜா மற்றும் அவருடன் இருந்த வாலிபரை மீட்டுச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, நடந்த விஷயத்தைக் கூறியுள்ளனர். இதையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த மற்ற சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீசார் இப்படித்தான் நடந்து கொண்டார்கள்: தோலுறிக்கும் பத்திரிகையாளர்!