Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனின் கொலைக்கு காரணமானவர்களை அடுக்கடுக்காக போட்டுத் தள்ளும் மனைவி

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (13:37 IST)
கணவரை கொன்றவர்களை பழி வாங்க சதி திட்டம் தீட்டிய  எழிலரசி என்ற பெண் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்காலைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எழிலரசி என்பவரை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.
 
இதனால் ஆத்திரமடைந்த வினோதா, ராமுவையும் எழிலரசியையும் கொல்ல திட்டமிட்டு கடந்த 2013-ஆம் ஆண்டு கூலிப்படையினரை வைத்து ராமுவையும், எழிலரசியையும் தாக்கினார்.  கூலிப்படையினர் தாக்குதலில் ராமு இறந்துவிடவே எழிலரசி காயங்களுடன் உயிர் தப்பினார்.
 
இதனையடுத்து உயிர் தப்பிய எழிலரசி வினோதாவை கொல்ல திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி கடந்த 2014-ஆம் ஆண்டு வினோதாவை கொடூரமாக கொலை செய்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசியை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.
 
கடந்தாண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி கணவரின் கொலையில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாரை கூலிப்படையை ஏவி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொன்றார். இதனால் எழிலரசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி, கணவரின் கொலையில் தொடர்புடைய ஆனந்த் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தார். இதனையறிந்த போலீஸார் எழிலரசி மற்றும் அவருடன் இருந்த 13 ரவுடிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments