Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓயாமல் படுக்கைக்கு அழைத்த கணவன் - விரக்தியில் மனைவி தற்கொலை

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (10:45 IST)
கிருஷ்ணகிரியில் கணவன் மனைவியை ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்த மாயப்பனுக்கும், அத்திகானூரைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கும் கடந்த 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பல கனவுகளோடும் ஆசைகளோடும் வாழ்க்கையை துவங்க நினைத்த அபிராமியை மாயப்பனும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சனைக்காக கொடுமை படுத்தியுள்ளனர்.
 
இதனால் அபிராமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அபிராமியின் பெற்றோர் கணவர் வீட்டை அனுசரித்துப் போகும்படி கூறி, மகளை அழைத்துக் கொண்டு மாயப்பனின் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசிவிட்டு வந்துள்ளனர்.
 
ஆனாலும் திருந்தாத மாயப்பனும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து அபிராமியை கொடுமைபடுத்தி வந்துள்ளனர். கணவன் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், தந்தை வீட்டிற்கு செல்ல முடியாமலும் தவித்தார் அபிராமி. ஒரு கட்டத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 
 
இறுதியாக அபிராமி சாவதற்கு முன் ஆடியோ ஒன்றை தனது பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். அதில் கணவன் தன்னை தொடர்ந்து படுக்கைக்கு அழைத்து துன்புறுத்தியதாகவும், மாயப்பன் குடும்பத்தினர் தன்னை கொடுமை படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் அபிராமியின் பெற்றோர் தங்கள் மகள் தற்கொலை செய்யவில்லை என்றும், அவரை மாயப்பனின் குடும்பத்தினர் தான் கொலை செய்துவிட்டனர் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாயப்பனையும் அவரது குடும்பத்தாரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்