Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் நடத்தும் யாகத்தை வீரமணி ஏன் கேள்வி கேட்கவில்லை? தமிழிசை

Webdunia
புதன், 22 மே 2019 (19:25 IST)
மழைக்காக யாகம் நடத்தியதை கேலி செய்த கி.வீரமணி, தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் நடத்தும் யாகம் குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்ய யாகம் நடத்துமாறு அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்த வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி யாகம் செய்தால் மழை வருமா? இது என அறநிலையத்துறையா? அல்லது புரோகித துறையா? என கிண்டலடித்திருந்தார்.
 
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகம் குறித்த போஸ்டர்களில் மு.க.ஸ்டாலின் படமும் உள்ளது. இதனை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் நடத்தும் யாகம் குறித்து கி.வீரமணி ஏன் கேள்வி கேட்கவில்லை? யாகம் வளர்த்தால் மழை வருமா என கேள்வி கேட்டவர்கள் இப்போது எங்கே சென்றனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மேலும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றபோது வாக்கு இயந்திரம் மீது வராத சந்தேகம் இப்போது வருவது ஏன்? என்றும் அவர் கூறியுள்ளார். தமிழிசை கூறியது போலவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றபோது வாக்கு இயந்திரன் குறித்து எதிர்க்கட்சிகள் எந்த கேள்வியையும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments