கார் பந்தயத்திற்கு ரூ.240 கோடி செலவிடுவது ஏன்?எடப்பாடி பழனிசாமி

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (16:42 IST)
சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4   பந்தயம் பற்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

‘’சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4 போட்டிகளுக்கான ஏற்பாடுகள்  தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  இந்தப் போட்டிக்கான டிக்கெட்-ஐ அமைச்சர் உதயநிதி சமீபத்தில் அறிமுகம் செய்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெறும் இந்த சிறப்புக்குரிய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  இந்தக் கார் பந்தயம் பற்றி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘’கார் பந்தயம் நடத்த ரூ.240 கோடி   திமுக அரசு செலவிடுவது ஏன்?  ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு நிதியில்லாமல் இருக்கும் நிலையில், பந்தயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

NDA கூட்டணியில் சேர்ந்ததால் எழுச்சி பெற்ற ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி.. 22 தொகுதிகளில் முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments