Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் பந்தயத்திற்கு ரூ.240 கோடி செலவிடுவது ஏன்?எடப்பாடி பழனிசாமி

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (16:42 IST)
சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4   பந்தயம் பற்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

‘’சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4 போட்டிகளுக்கான ஏற்பாடுகள்  தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  இந்தப் போட்டிக்கான டிக்கெட்-ஐ அமைச்சர் உதயநிதி சமீபத்தில் அறிமுகம் செய்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெறும் இந்த சிறப்புக்குரிய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  இந்தக் கார் பந்தயம் பற்றி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘’கார் பந்தயம் நடத்த ரூ.240 கோடி   திமுக அரசு செலவிடுவது ஏன்?  ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு நிதியில்லாமல் இருக்கும் நிலையில், பந்தயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் தீர்ப்பு.. தீர்ப்புக்கு பின்னரும் போராடும் மருத்துவர்கள்..!

பரந்தூர் செல்லும் விஜய்க்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை: காஞ்சிபுரம் எஸ்பி தகவல்..!

சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments