Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை ஏன் தாக்கினார் தெரியுமா?: உளவுத்துறை ரிப்போர்ட்

சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை ஏன் தாக்கினார் தெரியுமா?: உளவுத்துறை ரிப்போர்ட்
, திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (12:50 IST)
அதிமுக பெண் எம்.பி.சசிகலா புஷ்பா திமுக எம்.பி.திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இதனையடுத்து சசிகலா புஷ்பாவை நேரில் அழைத்து விளக்கம் கேட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. அப்போது முதல்வர் ஜெயலலிதாவை பற்றியும், தமிழக அரசை பற்றியும் திருச்சி சிவா விமர்சித்ததால் தான் தாக்கியதாக கூறினார்.
 
ஆனால் அவர் கூறியது உண்மையா என்பதை விசாரிக்க உளவுத்துறையிடம் ஜெயலலிதா கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உளவுத்துறை அளித்த தகவலில், திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவுக்கு பணம் கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில் சிவாவும், சசிகலா புஷ்பாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியது. இதனால் இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
 
இதனையடுத்து தான் கொடுத்த பணத்தைக் கேட்க சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட போது அவர் அதனை எடுக்கவில்லை. இந்நிலையில் விமான நிலையத்தில் திருச்சி சிவாவை நேரில் பார்த்த சசிகலா புஷ்பா அவரால் தனக்கு கெட்டப்பெயர் உருவாகி கட்சியில் பதவி பறிபோகும் நிலையில் உள்ளதால் உணர்ச்சிவசப்பட்டு தாக்கினார் என உளவுத்துறை கூறியதாக தகவல்கள் வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது: கண்ணீர் விட்டு கதறிய சசிகலா