கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை? எடப்பாடி பழனிசாமி

Siva
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (19:27 IST)
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இதில் இருந்து திமுக - பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று கூறியுள்ளார்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் 90% பணிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்றும் மீதமுள்ள 10 சதவீத பணிகளை மூன்று ஆண்டுகளாக திமுக அரசு நிறைவேற்றாமல் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணியை திமுக நிறைவேற்றுவதாக கூறி வருகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கவர்னர் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கதாக கூறிவிட்டு முதலமைச்சர் பங்கேற்றது வேடிக்கையாக இருக்கிறது என்றும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்போம் என்று ஆர்எஸ் பாரதி கூறிய நிலையில், கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்பதாக அறிவித்ததும் திமுக நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் இதிலிருந்து திமுக பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தியை அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்த போது பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments