இவ்வளவு நல்ல கட்சியா திமுக? நெட்டிசன்கள் கிண்டல்

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (07:30 IST)
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தி பேரவையில் வலியுறுத்தாதது ஏன்? என திமுகவின் நாளேடான முரசொலியில் விளக்கப்பட்டுள்ளது. அதாவது சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தி பேரவையில் எடுத்துக்கொள்ள செய்வது திமுகவிற்கு ஒன்றும் கடினமான காரியமல்ல என்றும், அப்படி செய்திருந்தால் தமிழகத்தை வாட்டி வதைக்கும் குடிநீர் பஞ்சம், ஹைட்ரோகார்பன் போன்ற பிரச்னைகள் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என்றும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
 
அப்படிபட்ட எதிர்மறை நிலையை தடுப்பதற்காகவே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இப்போதைக்கு வலியுறுத்தபோவதில்லை என்ற  சாதுர்யமான முடிவை மு.க.ஸ்டாலின் எடுத்திருப்பதாகவும் அந்நாளேடு குறிப்பிட்டுள்ளது.
 
திமுகவின் இந்த விளக்கத்தை நெட்டிசன்கள் 'இவ்வளவு நல்ல கட்சியா? என  கிண்டலடித்து வருகின்றனர்.  குடிநீர் பஞ்சம், ஹைட்ரோகார்பன் போன்ற பிரச்னைகளுக்காக விளம்பரம் தேடிக்கொள்ளும் போராட்டங்களை தவிர திமுக ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்றும், குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும்போதும் சிங்கப்பூர் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் ஸ்டாலின் எடுத்த சாதுர்யமான முடிவா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
சமூக ஆர்வலர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளை தூர்வார கிளம்பியிருக்கும் நிலையில் திமுக ஒரு ஏரியையாவது தூர் வார முயற்சித்ததா? என்றும், போராட்டத்தை தவிர திமுகவுக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments