Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் கொடுத்தது ஏன்? புது ரூட் எடுத்தது தான் காரணமா?

Siva
திங்கள், 11 மார்ச் 2024 (09:01 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஆறு முதல் எட்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக பிடிவாதமாக இருந்த நிலையில் திடீரென பத்து தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது திமுகவின் மேலிட வட்டாரத்திற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரமுகர்கள் சிலர் 10 தொகுதிகள் தராவிட்டால் புது ரூட் போட்டு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மேல் இடத்தில் சொன்னதாகவும் அதற்கு மேலிடமும் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதை அறிந்து கொண்ட திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் சென்றால் இந்தியா கூட்டணி கேள்விக்குரியதாக மாறிவிடும் என்று முடிவு செய்ததாகவும் இதையடுத்து தான் வேறு வழியின்றி தான் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளை திமுக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

எப்படியோ காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற செல்வபெருந்தகை கடந்த முறை பெற்ற பத்து தொகுதிகளை பேசி பெற்றுவிட்டதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments