Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது ஏன்? ஆணையர் விளக்கம்

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (11:05 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதற்கான விளக்கத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு இருப்பதாகவோ அல்லது இருப்பதாக சந்தேகிப்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவோ அறியப்படும் நபர்கள் மற்றும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தப்படும் வீடுகளில் தமிழக அரசின் சார்பில் ‘தனிமைப்படுத்தப்பட்ட இல்லம்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் கொரோனா போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சில மணி நேரங்களில் அந்த போஸ்டர் அகற்றப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ”கமல்ஹாசனிடம் பணி புரியும் ஒருவர் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்ததால் அவரது வீட்டில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. ஆனால் தற்போது அவர் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் வசிப்பதில்லை என்பது தெரியாததால் அங்கு ஒட்டப்பட்டுள்ளது. பிறகு நீக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற சிறிய தவறுகள் மீண்டும் நடக்காமல் கவனமாக கையாளப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments