Publish Date: Tue, 12 Oct 2021 (19:30 IST)
Updated Date: Tue, 12 Oct 2021 (19:35 IST)
பாஜக வேட்பாளர் கார்த்திக் என்பவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று இருந்ததை அடுத்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். அவரும் அவருடைய குடும்பத்தினரும் கூட ஓட்டு போட வில்லையா என்ற கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார்
பாஜக சார்பில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் வார்டு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது
இவர் நான்காவது வார்டில் தனது குடும்பத்தினருடன் குடி இருப்பதாகவும் ஆனால் போட்டியிட்டது ஒன்பதாவது வார்டு என்பதால் தானும் தன்னுடைய குடும்பத்தினர்களும் தனக்கு ஓட்டுப் போட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
இருப்பினும் அடுத்த தேர்தலில் நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று கட்சிக்கு நல்ல பெயரை பெற்றுத் தருவேன் என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.