Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜீத் ஏன் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவில்லை? : நடிகர் சங்கம் விளக்கம்

அஜீத் ஏன் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவில்லை? : நடிகர் சங்கம் விளக்கம்
, புதன், 27 ஏப்ரல் 2016 (17:26 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர் அஜித்குமார் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.


 

 
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக, சென்னை சேப்பாக் அரங்கில், சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
 
அதில் தமிழ் நடிகர்கள் ரஜினி, கமல், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் உட்பட பல நடிகர், நடிகைகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 
 
நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் சூர்யா அணி வெற்றி பெற்றது.
 
ஆனால், அந்த போட்டியில் நடிகர் அஜீத் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதுபற்றி நடிகர் சங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது:
 
நடிகர் அஜீத் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார். அதனால் அவர் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் மீது, நடிகர் சங்கம் அதிருப்தியில் இருப்பதாக வெளிவந்த செய்திகள் உண்மை இல்லை. 
 
ஏனெனில், நட்சத்திர கிரிக்கெட்டில் கலந்து கொள்ளாதது பற்றி அவர் எந்த போட்டியோ, அறிக்கையோ வெளியிடவில்லை” என்று கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது திருமணம் செய்த குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடையாது – உயர் நீதிமன்றம்