Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா? வைரலாக பரவும் வீடியோ

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (07:16 IST)
ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா? என்ற தலைப்பில் வீடியோ ஒன்று ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.


 

 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் ராம்குமாரிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்தி முடித்ததில், ராம்குமார் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியானது.
 
அதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கத்தில் ராம்குமார் மற்றும் சுவாதியின் நண்பராக கூறப்படும் பிலால் மாலிக்கிடம்  விசாரணை நடத்தப்பட்டது. 
 
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் தேசியகொடியை எரித்து சர்ச்சையில் சிக்கிய மகேந்திரன் திலீபன் என்பவர், ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா? என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ் மூலம் ராம்குமாரின் முகநூல் பக்கத்தின் பாஸ்வர்டை பெற்றதாக கூறப்படுகிறது.
 
சுவாதி கொலை வழக்கில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை உள்ளடக்கி இந்த வீடியோ உள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments