Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் செத்துட்டேன்னு யார் சொன்னது? வீடியோவில் வந்து ஷாக் கொடுத்த நித்யானந்தா!

Prasanth Karthick
வியாழன், 3 ஏப்ரல் 2025 (10:25 IST)

சாமியார் நித்யானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அவர் தோன்றி பேசும் வீடியோவை கைலாசா யூட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

 

திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட சாமியார் நித்யானந்தா அங்கே ஒரு மடத்தை நிறுவிய நிலையில், நாளடைவில் அவர் பிரபலமாகி பல நாடுகளில் அவரது மடம் பரவியது. முன்னதாக இவர் ஒரு நடிகையுடன் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நித்யானந்தா மீது பண மோசடி முதற்கொண்டு பல குற்றச்சாட்டுகள் உள்ளன

 

நித்யானந்தா மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு ஒன்றில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் அவர் தலைமறைவானார். அவர் கைலாசா என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அங்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. கைலாசாவுக்கு என தனி பாஸ்போர்ட் போன்றவையும் ட்ரெண்டான நிலையில் அந்த நாடுதான் எங்கிருக்கிறது என தெரியவில்லை.

 

இந்நிலையில் கைலாசாவில் இருந்து அவ்வபோது தனது சீடர்களிடம் வீடியோ மூலம் பேசி வந்த நித்யானந்தா இறந்துவிட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று கைலாசா தரப்பில் அறிக்கை வெளியானது.

 

தற்போது கைலாசா யூட்யூப் சேனலில் நித்யானந்தா 4 மணி நேரம் ஆன்மீக உரையாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் பரம்பொருளின் அருளால் தான் நலமாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்புடன் ஆனந்தமாக, நிம்மதியாக இருப்பதாக பேசியுள்ளார். உலகின் முதல் ஆன்மீக ஏஐ மாடலை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக இருப்பதால் அடிக்கடி நேரலையில் வர இயலவில்லை என அவர் பேசியுள்ளார். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

சென்னை செண்ட்ரல், கடற்கரை உட்பட 19 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்