Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்குமார் விவகாரம்; யார் அந்த கருப்பு ஆடு: விசாரணைக்கு உத்தரவிட்ட ஏடிஜிபி!

ராம்குமார் விவகாரம்; யார் அந்த கருப்பு ஆடு: விசாரணைக்கு உத்தரவிட்ட ஏடிஜிபி!

ராம்குமார் விவகாரம்; யார் அந்த கருப்பு ஆடு: விசாரணைக்கு உத்தரவிட்ட ஏடிஜிபி!
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (14:46 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்ததாக தகவல் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.


 
 
இந்நிலையில் ராம்குமார் மின்சார ஒயரை கடித்ததாக கூறப்படும் அந்த சுவிட்ச் பாக்ஸ் மற்றும் ஒயர் புகைப்படம் வெளியாகியது. இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. டைல்ஸ் பதிக்கப்பட்ட அந்த சுவிட்ச் பாக்ஸை ராம்குமார் எப்படி எந்த காயமும் இல்லாமல் உடைக்க முடிந்தது உள்ளிட்ட பல சந்தேகங்கள் எழுந்தது.
 
இந்நிலையில் இந்த புகைப்படம் எப்படி வெளியானது என்ற சந்தேகமும், அதிர்ச்சியும் போலீஸ், சிறைத்துறை தரப்பில்  நிலவியது. இந்நிலையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி விஜய்குமார் இது தொடர்பாக விசாரணை நடத்தி  புகைப்படம் எவ்வாறு வெளியாகியது என்பதை கண்டறிய வேண்டும் என்று காவல்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
இதற்கு முன்னர் ராம்குமார் கைது செய்யப்படும் போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்பட்ட போது அவர் கழுத்து அறுபட்ட புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த புகைப்படத்தை யார் எடுத்தது அது எப்படி வெளியாகியது என்ற கேள்வியும் நீதிமன்றத்தால் எழுப்பப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இ.எல்.சி.பி கருவி உள்ள கட்டிடத்தில் எப்படி மின்சாரம் தாக்கி பலியாவார்கள்?: ராம்குமார் தரப்பு வாதம்