Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருட்டுக்கடை உரிமை யாருக்கு? மீண்டும் பொது அறிவிப்பு! - புகழ்பெற்ற ஸ்தாபனத்திற்கு வந்த சோதனை!

Prasanth Karthick
செவ்வாய், 13 மே 2025 (09:33 IST)

திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா ஸ்தாபனத்தின் உரிமை தொடர்பாக வாரிசுகளிடையே மோதல் எழுந்துள்ள நிலையில் மற்றுமொரு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலியில் உள்ள இருட்டுக்கடை அல்வா தேசிய அளவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. தற்போது இந்த இருட்டுக்கடையை கவிதா சிங் நடத்தி வருகிறார். சமீபத்தில் கவிதா சிங்கின் மகளுக்கு திருமணமான நிலையில் இருட்டுக்கடை உரிமையை அவர்கள் எழுதி கேட்டு மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதைத் தொடர்ந்து இருட்டுக்கடையின் உரிமையாளரான பிஜிலி சிங் எழுதிய உயிலின் படி, இருட்டுக்கடை தனக்குதான் சொந்தம் என கவிதா சிங்கின் சகோதரர் நயன் சிங் பொது அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து ப்ரேம் ஆனந்த் சிங் தவறான தகவல்களை பரப்புவதாக கவிதா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இந்த உரிமை விவகாரத்தில் தற்போது கவிதா சிங் தரப்பில் மற்றுமொரு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரேம் ஆனந்த் சிங் அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும், இருட்டுக்கடை சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அவர் செயல்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா முழுவதும் பிரபலமான ஸ்தாபனமான இருட்டுக்கடை இப்படி வாரிசுகள் தகராறில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments