Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார்.? திமுக அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

Senthil Velan
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (11:36 IST)
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்ற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். 
 
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 51 வார்டுகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 

பின்னர் நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து இவர் மீது திமுக கவுன்சிலர்கள் பலர் தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
 
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டும், மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால், தீர்மானம் கைவிடப்பட்டது. இதையடுத்து மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்தார்.
 
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில் நெல்லை  மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு மறைமுக மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

ALSO READ: ஹமாஸ் தலைவர் படுகொலை எதிரொலி.! படைகளை அனுப்பிய அமெரிக்கா.! உச்சகட்ட போர் பதற்றம்..!!

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிட்டு, நெல்லை மாநகராட்சியின் 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆவார். மேலும், இவர் 1980 முதல் திமுக உறுப்பினராகவும், 2வது முறை கவுன்சிலராகவும் உள்ளார். அதேநேரம், 5 முறை திமுக வட்டச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments