Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்காக ரூ.10 கோடி டிடி எடுத்தவர்கள் யார் யார்?

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (13:31 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் ரூபாய் 10 கோடி அபராதம் கட்ட வேண்டும் என நீதிமன்றம் சசிகலாவுக்கு உத்தரவிட்டதை அடுத்து சசிகலா சார்பில் இன்று ரூபாய் 10 கோடியை கட்ட இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் 10 கோடி ரூபாய்க்கான டிடி தயாராக இருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தவுடன் அந்த டிடியை சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 3 பேர்கள் பெயரில் மட்டும் 10 கோடி டிடி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவரின் பெயரில் மூன்றே கால் கோடி டிடியும், வசந்தா தேவி என்பவரின் பெயரில் மூன்றே முக்கால் கோடி டிடியும் எடுக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஆக்சிஸ் வங்கியில் ஹேமா என்பவரின் பெயரில் மூன்று கோடி ரூபாய்க்கு டிடி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் விவேக் பெயரிலும் ஆக்சிஸ் வங்கியில் ரூபாய் 10,000க்கான டிடி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments