Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் சி.எம். ஆக வந்தாலும் இந்த கையெழுத்தை போட வைப்பேன்: கமல்

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (07:07 IST)
சென்னை மயிலாப்பூரில் பெண் தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கமல்ஹாசன், நடிகர் பார்த்திபன் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் கூறினார்.
 
முதலமைச்சர் ஆன பின்னர் உங்களுடைய முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்று நடிகர் பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன்,`தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது.  நான் முதல்வராக ஆனால் மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில் என் முதல் கையெழுத்து போடுவேன்' என்று கூறினார். மேலும் வேறு யார் முதல்வராக வந்தாலும் இந்த கையெழுத்தை போட வைப்பேன், நான் முதல்வரானால் எனது முதல் கையெழுத்து இதுதான் என்று கூறினார்.
 
முன்னதாக கமல் பேசியபோது, '`மக்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதால் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியல் என்னும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். குறிப்பாக அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கமல் கேட்டு கொனார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments