Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்போது எங்கிருந்து சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்? – வானவியலாளர்கள் கருத்து!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (18:53 IST)
எதிர்வரும் 26ம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை எங்கிருந்து முழுவதுமாக காணமுடியும் என்பது குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. நாளை கிறிஸ்துமஸ் நடைபெற இருக்கும் நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் இந்த சூரிய கிரகணம் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படுகிறது. அதாவது நிலவு சூரியனை முழுவதும் மறைத்திருக்க விளிம்புகளில் வெளிப்படும் சூரிய வெளிச்சம் ஒரு தங்க மோதிரத்தை போல காட்சியளிக்கும்.

இந்த நிகழ்வு இந்தியாவில் பெங்களூரு, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் 75 % வரை காணமுடியும். ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 66% முதல் 44% வரையான கிரகணத்தை காணலாம். இந்தியா முழுவதும் காணமுடியாத இந்த கிரகணத்தை கேரளாவின் கன்னூர் முதல் தெற்கு பகுதிகள் வரை உள்ள இடங்களில் தெளிவாக காண முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நார்வேயை சேர்ந்த டைம் அண்ட் டேட் ஆய்வியல் நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி இந்தியாவில் கிரகணம் சரியாக காலை 7.59 மணியளவில் தொடங்கும் எனவும், பாதி கிரகணமாக 9 மணிக்கு காட்சியளிக்கும் எனவும், பிறகு முழுமையான கிரகணமாக 10:47 மணிக்கு உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments