Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 24 ஏப்ரல் 2025 (15:49 IST)
கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அறிவிப்பை உயர்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
2025 - 26 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ஆம் தேதி திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
அதேபோல் தமிழகத்திற்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையில் தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு ஏப்ரல் 24ஆம் தேதி முடியும் நிலையில் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் விடைத்தாள் திருத்தம் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ஆம் தேதி முதல் விடுமுறை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சூறாவளி கிளம்பியதே..! மத்திய பாஜக அரசை கண்டித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி.. ஈபிஎஸ் வரவேற்பு

அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவனை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர்.. நெல்லையில் பரபரப்பு..!

மாதம் 44 ஆயிரம் சம்பளம்..! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! - முழு விவரம்!

யார் கையிலயும் காசு இல்ல.. டிஜிட்டல் பே மூலம் பிச்சை! அப்டேட் ஆன பிச்சைக்காரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments