Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது எப்போது?

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (16:01 IST)
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என அமைச்சர் பேட்டி. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த இந்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
 
இந்நிலையில், 2-18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்துவருகிறது. 
 
மத்திய அரசு அனுமதி அளித்ததுடன் தடுப்பூசி போடுவது தொடங்கப்படும். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்.. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஆளுநர் எடுத்த நடவடிக்கையால் அதிமுகவில் பரபரப்பு..!

தொடங்கிய மீன்பிடித்தடைக்காலம்.. திரும்பி வந்த படகுகள்! எகிறும் மீன் விலை!

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடந்து சென்று ஆஜரான பிரியங்கா காந்தி கணவர்.. என்ன காரணம்?

8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கர சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments