Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது?

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது?
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (21:42 IST)
ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போதும் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு மற்றும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என இரண்டு கருத்துக்கணிப்புகள் வெளியாகும் 
 
ஏற்கனவே வெளியான வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துகணிப்புகளும் திமுக வெற்றி பெறும் என கூறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு எப்போது வெளிவரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வந்தாலும் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் தேர்தல் முடிவடையவில்லை. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்பது 8ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஏழு முப்பது மணிக்கு பின்னரே வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் அறிகுறி.... முன்னாள் ஐஏஎஸ் சகாயம் மருத்துவமனையில் அனுமதி