Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”என்ன நடந்தாலும் சட்டமன்றத்தில் பேசாமல் வெளியே வரமாட்டோம்” - ஸ்டாலின் சபதம்

”என்ன நடந்தாலும் சட்டமன்றத்தில் பேசாமல் வெளியே வரமாட்டோம்” - ஸ்டாலின் சபதம்
, திங்கள், 18 ஜூலை 2016 (00:09 IST)
என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டமன்றத்தில் பேசாமல் வெளியே வரமாட்டோம் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
சேலத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் திமுகவை, திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
விழாவில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், ‘’13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்த தலைவர் கலைஞர். சாதனைத் தலைவர் தலைமையிலான திமுகவில் இணைந்துள்ள மக்கள் தேதிமுகவினரை வரவேற்கிறேன்.
 
திமுக ஆட்சிக்கு வரவில்லையே என நம்மைவிட வேதனைப்படுபவர்கள் பொதுமக்கள்தான். என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டமன்றத்தில் பேசாமால் வெளியே வரமாட்டோம். தற்போது தமிழக சட்டமன்றத்தில் ஒரே எதிர்க்கட்சியாக திமுக இடம் பெற்றுள்ளது.  
 
நூற்றாண்டு கொண்ட திராவிட இயக்கம் மேலும் பல நூற்றாண்டு இருந்தாக வேண்டும். திமுகவை தொடங்கிய அண்ணா விட்டுச்சென்ற பணிகளை கலைஞர் நிறைவேற்றி வருகிறார். 67 ஆண்டு காலமாக திமுக தமிழர்களுக்காக தனது கடமையை நிறைவேற்றி வருகிறது” என்று பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’நான் பேசி 14 தேசிய வங்கிகள் நாட்டுடைமை ஆகின; ஜெ. போகாதது நல்லதல்ல’ - கருணாநிதி