Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை பட்ஜெட் தாக்கல்: தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்...?

நாளை பட்ஜெட் தாக்கல்: தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்...?
, வியாழன், 31 ஜனவரி 2019 (19:21 IST)
நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தல் வருவதால் மத்திய அரசு இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நாளை காலை பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்களாம் என்பதன் பட்டியல் இதோ..
 
சாலை தொடர்பான திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள், தமிழக விவசாயிகளை கவரும் வகையில் திட்டங்கள் ஆகியவற்றை எதிர்ப்பார்க்கலாம் என தெரிகிறது. 
 
குறிப்பாக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பதால் தமிழகம் மீது கவனம் செலுத்தவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.
 
இவற்றை தவிர்த்து அவ்வப்போது வரும் கருத்து கணிப்புகளில் பாஜக தமிழகத்தில் தோல்வியை சந்திக்கும் என கூறப்படுவதால் இதை எல்லாம் மனதில் வைத்து தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்ப்பார்ப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6.5 கோடி இளைஞர்களை ஏமாற்றிய மோடி...? ராகுல்காந்தி குற்றச்சாட்டு