Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழடியில் 2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மக்கள் எப்படி இருந்தனர்? - மாதிரி புகைப்படம் வெளியீடு!

Prasanth K
ஞாயிறு, 29 ஜூன் 2025 (11:55 IST)

தமிழ்நாட்டின் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ள நிலையில் அங்கு வாழ்ந்த மக்களின் முகம் எப்படி இருக்கும் என்ற மாதிரி வெளியாகியுள்ளது.

 

மதுரை மாவட்டத்தின் கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் பழங்கால தமிழ் மக்களின் ஏராளமான பயன்பாட்டு பொருட்கள் கிடைத்துள்ளன. கி.மு 6ம் நூற்றாண்டிலேயே அவர்கள் கல்வி கற்ற சமூகமாக இருந்ததை மெய்ப்பிக்கும் விதமாக எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. 

 

கீழடி தொடர்பாக 982 பக்க அகழாய்வு அறிக்கையை தமிழக தொல்லியல் துறை தாக்கல் செய்த நிலையில் அதை ஏற்க மத்திய தொல்லியல் துறை மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

 

இந்நிலையில் கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை கொண்டு 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கீழடி மக்களின் உருவம் எப்படி இருக்கும் என உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆய்வகம் ஒன்றில் 80 சதவீதம் அறிவியல் 20 சதவீதம் கலையை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த உருவப்படமானது 2500 ஆண்டுகள் முன்னர் தமிழர்களின் தோற்றம் எப்படி இருந்தது என்பதற்கான ஒரு உதாரணமாக அமைவதகா கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கூட்டணிக்கு திருமா வருவாரா? திமுகவின் பிளான் B என்ன?

திருந்தவே மாட்டீங்கள்ல..? இந்தியா அழித்த பகுதிகளில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள்! பாகிஸ்தான் தந்திர வேலை!

திருமணமான நபருடன் தகாத உறவு.. பெண்ணின் ஆடையை கிழித்து மொட்டையடித்த சம்பவம்.. பெரும் அதிர்ச்சி..!

9 கொலைகள்! ஜப்பானை உலுக்கிய சைக்கோ கில்லர்! - மரண தண்டனை நிறைவேற்றம்!

14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தாய்! - சிறுமி அளித்த பகீர் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments