Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் 3வது அணி முயற்சி என்ன ஆனது?

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (22:35 IST)
திமுக, அதிமுக கூட்டணியில் இணையாமல் தனித்து போட்டியிட போவதாக அறிவித்த கமல்ஹாசன் பின்னர் திடீரென ஒத்த கருத்துடையவர்கள் வந்தால் கூட்டணி அமைப்போம் என்றார். கேரள முதல்வர் நல்ல அறிமுகம் என்பதால் அவரது முயற்சியால் டெல்லி சென்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் அவர்களை சந்தித்து கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரகாஷ் காரத், தமிழகத்தில் திமுக கூட்டணி என்பது முடிவாகிவிட்டது தற்போது திடீரென மாற்ற முடியாது என்று கூறிவிட்டதால் கமல் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
 
அதன்பின் பாஜக அளவுகூட தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத ஆம் ஆத்மி கட்சியின் தலைவரை கமல் சந்தித்தார். ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதும் தனித்து போட்டியிடுவதும் கிட்டத்தட்ட ஒன்று என்ற முடிவுக்கு வந்த கமல், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுடனான சந்திப்பு நட்புரீதியானது என்று கூறி ஒருவழியாக சமாளித்தார்.
 
திமுக கூட்டணியில் தேமுதிகவும், ஐஜக அதிமுக கூட்டணியிலும் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதால் கமல் மீண்டும் தனித்து போட்டி என்ற பல்லவியையே பாட வேண்டும் என்பதை தவிர வேற வழியில்லை. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments