Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 22 வரை தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Siva
திங்கள், 17 மார்ச் 2025 (09:02 IST)
தமிழகத்தில் மார்ச் 22ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் கூட மிதமான மழை பெய்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில், தமிழகத்தில் சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 22ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. மார்ச் 25ஆம் தேதி வரை வெப்பநிலை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்பட்டாலும், மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை சென்னையில் இன்று வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, ஒரு பக்கம் சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்றாலும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதே வானிலை ஆய்வு அறிக்கை கூறும் தகவல் ஆகும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments